சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 29 March 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சாரம் - நாள் 3

SDPI யின் சென்னை துறைமுக தொகுதியில் 3 வது நாள் தேர்தல் பிரச்சாரம் 26-மார்ச்-2011, சனிய‌ன்று காலை 10 மணியளவில் துவங்கி இரவு 10 மணி வரை தொடர்ந்தது. தொண்டர்கள் பலர் கலந்துகொள்ள தேர்தல் பிரச்சாரம், SDPI யின் தேர்தல் அலுவலகம் உள்ள மண்ணடி லிங்கிசெட்டி தெருவிலிருந்து ஆரம்பித்து ஈத்கா பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள தெருக்களில் நடைபெற்றது. தொகுதியிலுள்ள மக்கள் ஒவ்வொருவரின் வீடுவீடாக மற்றும் கடை கடையாகச் சென்று SDPI யின் வேட்பாளர் வாக்குகளை சேகரித்தார்.

பிற கட்சிகளின் வேட்பாளர்கள் தொகுதிவாசிகளாக இல்லை, அவர்களால் துறைமுக தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு சேவையாற்ற முடியாது, தொகுதிவாசியாக உள்ள SDPI யின் வேட்பாளரால் மட்டுமே மக்களின் தேவைகளை புரிந்து, பணியாற்ற முடியும் என SDPI யின் வேட்பாளர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment