சட்டமன்ற தேர்தல் 2011 - சென்னை துறைமுகம் தொகுதி

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலை தனியாக எதிர்கொள்ள, மாபெரும் தேசிய அரசியல் கட்சியான SDPI முடிவெடுத்து, சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிடுகிறது. தேர்தல் களப்பணிகள், நடைபெறும் முறைமை, பிரச்சாரம், மக்கள் சந்திப்பு குறித்த தொகுப்பு இத்தளம்.

Tuesday, 5 April 2011

SDPI - சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் 05-ஏப்ரல்-2011

துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம், ஏழு கிணறு பகுதி
05-ஏப்ரல்-2011, SDPI யின் சென்னை துறைமுக தொகுதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஏழு கிணறு பகுதியின் பூங்கா அருகில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்களும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஃபக்ருத்தீன் அவர்களும், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் J.முஹம்மது நாஜிம் மற்றும் SDPI யின் வடசென்னை மாவட்ட தலைவர் S. அமீர் ஹம்ஜா, SDPI யின் தென்சென்னை மாவட்ட தலைவரும், துறைமுக தொகுதியின் வேட்பாளருமான P. முஹம்மது ஹுசைன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ஜாகிர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். RK நகர் பகுதி செயலாளர் சகோதரர் திரு.இரத்தினம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

SDPI யின் மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றும் பொழுது, துறைமுக தொகுதியின் வாக்காளர்கள் அனைவரும் இதுவரை ஏமாற்ற்ப்பட்டது போதும், இனிமேலும் ஏமாற வேண்டாம். ஏமாறவேண்டாமெனில் அனைவரும் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களிக்குமாறு, வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.


மாநில தலைவர் KKSM. தெஹ்லான் பாகவி அவர்கள் உரையாற்றும் பொழுது
பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் J.முஹம்மது நாஜிம் அவர்கள் உரையாற்றும் பொழுது, நமது நாடு போலி அரசியல்வாதிகளினால் ஆக்கிரமிக்கப்பட்டு, இந்தியர்கள் அனைவரும் உரிமை மறுப்புகளுக்கும், மோசடிக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். ஆகையால் அரசியல் - ஆட்சி மற்றம் என்பது இந்தியர்கள் அனைவரும், குறிப்பாக தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கக்கூடிய விஷயமாகும். அதற்கு நாம் அயராது உழைப்போம், வேண்டுமெனில் உயிரையும் கொடுப்போம் என்று உரையாற்றினார்.

துறைமுக தொகுதியின் வேட்பாளரான P. முஹம்மது ஹுசைன்அவர்கள் அறிமுகத்தின்போது
பின்னர் பேசிய பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் ஃபக்ருத்தீன் அவர்கள் இந்திய மக்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் தங்களது வாழ்வில் மறுமலர்ச்சியை எதிர்நோக்குவார்களேயானால், அரசியல் மாற்றந்தனை விரும்புவார்களென்றால் அவர்கள் மெழுகுவர்த்திகள் சின்னத்தில் வாக்களித்து SDPI யின் வேட்பாளரான P. முஹம்மது ஹுசைன் அவர்களை வெற்றிபெறச் செய்யவேண்டும், மேலும் இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்ப்படுத்த SDPI யினால் மட்டுமே முடியும் என்று கூறினார்.

துறைமுக தொகுதியின் வேட்பாளரான P. முஹம்மது ஹுசைன்அவர்கள் பேசுகையில், பிறர் கூறுவதைப்போல SDPI ஒன்றும் புதிதாக முளைத்த கட்சியல்ல. மாறாக மக்களினூடே, மக்களுக்காக பல வருடங்களாக சேவை செய்துவிட்டு, மக்கள் படும் துன்பங்களை சகிக்க முடியாமல், மக்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்ற அடிப்படையில் துவங்கப்பட்டதாகும். SDPI இருக்கும் வரையில் இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றுவதைப் பார்த்துக்கொண்டு இருக்காது, மக்களோடு கைகோர்த்து அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருவதில் முனைப்புடன் செயல்படும் என்றார்.

பொதுக்கூட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்ட மக்கள்

இப்பொதுக்கூட்டத்தில் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற பூங்காவினருகிலுள்ள பொது மக்களும் SDPI யின் கருத்துக்களை வரவேற்றனர். தென்சென்னை மாவட்ட பொதுசெயலாளர் புஹாரி அவர்கள் பொதுக்கூட்டத்திற்க்கு வருகை புரிந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

No comments:

Post a Comment